Saturday 21 April 2018

வடலூரில் ஒரு சேவை



 விளமல் ஆலயத்திலிருந்து வடலூர்  காப்பகத்துக்கு ஒரு சேவை:

கடலூர் மாவட்டம்மேட்டுக்குப்பத்தில் தவத்திரு கோவை சிவப்பிரகாச சுவாமிகள் நடத்தி வரும் இராமலிங்க வள்ளலார் சர்வதேச தரும பரிபாலன அறக்கட்டளைக்கு, விளமல் ஸ்ரீ அண்ணன் சுவாமிகள் ஆலயத்தின்  (விளமல் சரணாலயம்) சார்பாக ஆண்டுதோறும் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த வருடமும் விளமல் ஐயாவின் முயற்சியால் பல அன்பர்களின் உதவியோடு அங்கு இருக்கும் மாணவ,மாணவிகளுக்கு,முதியோர்களுக்கு தேவையான சோப்பு, எண்ணெய், பல் துலக்கி, பற்பசை, விரிப்புக்கள்,பாய், போர்வை, எழுது பொருட்கள், துணிகள், நோட்டுகள், மற்றும் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

இப்பொருட்களையெல்லாம் அவர்களுக்கு வழங்கிட   வரும்    13.05.2018  ஞாயிறு அன்று காலை விளமல் ஆலயத்திலிருந்து சில அன்பர்கள் மற்றும்  சென்னையிலிருந்து  சில அன்பர்கள் அங்கு  செல்ல உள்ளோம்

இந்த அருட்கொடையில் கலந்துகொண்டு சிறு உதவியேனும் செய்ய விருப்பமுள்ள நம் பக்தர்கள்  விளமல் ஆலயத்தை தொடர்புகொள்ளவும்.


தொடர்பு எண்கள்:

திரு.சிவப்பிரகாசம் ஐயா: 
9486319014
திரு பாபு: 
9344887114

  மேலும் விபரங்களுக்கு:  இங்கே கிளிக் செய்யவும்


Wednesday 18 April 2018

Slide Show New Year Abishekam


New year Mahabishekam was grandly performed for Annan Swamigal on 14/4/2018 at 6 pm in Vilamal Annan Swamigal Shrine. You Can see the slide show of few Abishekams performed. Click this  SLIDE SHOW.

Saturday 7 April 2018

தமிழ் வருட பிறப்பு அபிஷேகம்



ஸ்ரீ அண்ணன் சுவாமிகள் சரணாலயம் விளமலில் வரும் 14 ஏப்ரல், மாலை 6 மணிக்கு அண்ணன் சுவாமிகளுக்கு தமிழ் வருட பிறப்பு மகா அபிஷேகம் நடைபெறும்...அனைவரும் கலந்து கொண்டு அண்ணனின் அருள் பெறுக.